வலிகளுக்கு
உடனடி நிவாரணி :
இரவு
நேரம். திடீரென வயிற்று வலி, என்ன செய்வதென்று கை பிசைந்து கொண்டு நிற்கிறீர்களா?.
மருத்துவமனைக்குப் போகாமலே நம் வீட்டில் அடுப்பங்கரையில் வைத்திருக்கும் பொருட்களைக்
கொண்டே வலியைப் போக்க ஒரு எளிய வழி.
முதலில்
வலிக்கும் பகுதியில் தோலின் மேற்பரப்பில் நல்லெண்ணையை (செக்கில் ஆட்டிய எள் எண்ணெய்)
தடவி விடுங்கள்.
பின்னர் ஒன்று அல்லது இரண்டு சொம்பு தண்ணீரை கொதிக்க வைத்து அடுப்பில்
இருந்து இறக்கிய பின் ஒரு கைப்பிடி அளவு கல் உப்பும், கூடவே ஒரு ஸ்பூன் மஞ்சள் தூளும்
அதில் சேர்க்கவும்.
இரண்டையும் கரைத்த பின் ஒரு டர்க்கி டவலை எடுத்து இந்த நீரில் முக்கி, பிழிந்து விட்டு (எண்ணெய் தடவி மூன்று அல்லது நான்கு நிமிடங்கள் ஆகியிருக்கும் நிலையில்)
எண்ணெய் தடவியிருக்கும் இடத்தின் மேல் டவலால் ஒத்தடம் கொடுக்கவும்.
எண்ணெய்
இதனால் தோலின் மேற்பரப்பில் இருக்கும் நுண்ணிய துவாரங்களின் வழியே உடலுக்குள் ஊடுருவும்.
சூடான ஒத்தடம் இந்த ஊடுருவலுக்கு உதவும். ஒரு குழாயை இன்னொரு குழாய்க்குள் சொருக சிரமமாக
இருக்கும். ஆனால் அதே குழாயை சிறிது சூடு செய்து விட்டு சொருகினால் எளிதாக போகுமே அது
போலத்தான் இதுவும்.
No comments:
Post a Comment