Thursday, 28 May 2015

சிறுநீரக நோய்க்கு இஞ்சி ஒத்தடம்

சிறுநீரக நோய்க்கு இஞ்சி ஒத்தடம்

இஞ்சி ஒத்தடம்  கொடுக்கும் முறை :

1. ஒரு பானையில் மூன்று லிட்டர் நீரை கொதிக்க வைக்கவும்.

2. 125 கிராம்  இஞ்சியை துண்டு துண்டாக நறுக்கி, மிக்சி அல்லது அம்மியில் அரைத்து கொள்ளவும்.

3. அரைத்த இஞ்சியை ஒரு துணியில் சிறு மூட்டை போல் கட்டவும்.

4. இப்போழுது கொதிக்கும் நீரில் இஞ்சிச் சாரை நன்கு பிழிந்துவிட்டு,
துணி முடிச்சையும் போட்டு ஒரு தட்டை கொண்டு மூடவும்.

5. அடுப்பை குறைந்த எரி நிலையில் (சிம்) 20 – 25 நிமிடங்கள் வைக்கவும்.

6. பிறகு அடுப்பை அணைத்துவிட்டு மூடிய நிலையிலே 5 நிமிடங்கள் விடவும்.
  அந்த நீரில் மூன்று ஸ்பூன் கல் உப்பும், கூடவே ஒரு ஸ்பூன் மஞ்சள் தூளும் சேர்த்துக் கொள்ளவும்.

7. அடுத்து சிகிச்சைக்கான நபரை சட்டையை கழற்றிவிட்டு தலைக்குப்புற படுக்க சொல்லவும்.

8. பிறகு ஒரு சிறு துணியை, கொதிக்கும் இஞ்சி நீரில் நனைத்து புழிந்து, வேறு ஒரு கிண்ணத்தில் புழியவும். அந்த துண்டை சிறுநீரகம் அமைந்துள்ள முதுகின் அடிபகுதியில் விரித்து போடவும்.

9. சூடு தணிந்தவுடன் துணியை மீண்டும் நனைத்து, விரித்து தொடரவும். இவ்வாறாக நீர் ஆ றும் வரை தொடர்ந்து அரை மணி நேரம் செய்யவும்.

உணவு முறை :
சிறுநீரக செயல்பாட்டை சீர் செய்வதற்க்கு, உணவுக் கட்டுபாடு மிகவும் அவசியமானதாகும்.

சோடியம்:  
உப்பை தவிர்ப்பதன் மூலம் சோடியம் அளவை குறைக்கலாம். எனவே உணவில் அரை உப்பு சேர்த்து கொள்ளவும். உப்புக்கு பதில் எலுமிச்சை சாறு, மிளகு அல்லது குறைந்த அளவு சோடியமுள்ள ஏதெனும் தாவர இலைகளை சேர்த்து கொள்ளவும். நீ ங்கள் பெரிடோனில் டயாலிசிஸ் செய்தால் உப்பை குறைக்க வேண்டாம், ஏனெனில் டயாலிசிஸினால் அதிக அளவில் சோடியம் வெளியெற்றப்படுகிறது.

பொட்டாசியம், பாஸ்பரஸ்:
உணவில் பொட்டாசியம், பாஸ்பரஸ் அளவையும் குறைத்துக் கொள்ளவும். பயிர் வகைகளை தவிர்க்கவும். காய்கறிகளிலுள்ள பொட்டாசியம் அளவை சமைப்பதன் மூலம் குறைக்களாம். மேலும், காய்களை துண்டுதுண்டாக நறுக்கி ஒர் பானை நீரில் 4 மணி நேரத்திற்கு ஊறவைத்து உண்பதன் மூலமும் பொட்டாசியம் அளவை குறைக்களாம். பாஸ்பரஸ் நிறைந்த பா ல் மற்றும் பால் பொருட்கள் தவிர்க்கவும்.

நீர்:
நீரின்றி அமையாது இவ்வுலகமென்பது போல், நமது சிறுநீரக செயல்பாட்டுக்கும் அதன்மூலம் இரத்த அழுத்த கட்டுபாட்டுக்கும் நீரின் அளவு முக்கியமானது. தினமும் 1.4 லிட்டர் நீர் அருந்தவும். அதிக நீர் உயர் இரத்த அழுத்திற்க்கு வித்திடும். நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் பழங்கள், சாம்பார், இரசம் முதலியவையும் நமது நீர் தேவையை பூர்த்தி செய்கிறது என்பதை நினைவில் கொள்க.

சேர்த்து கொள்ள வேண்டியவை
ஒமம்:
ஒம இலை சிறுநீரக செயல்பாட்டுக்கு மிகவும் நல்லது. எனவே தினமும் உணவுடன் சிறிது ஒம இலையை சேர்த்து கொள்ளவும்.
புளி:
புளியிலுள்ள டார்டாரிக் அமிலம், சிறுநீர ஆக்சலேட் கற்கள் உருவாக்கத்தை தடுகிறது. புளியை அதிகம் உணவில் சேர்த்து கொள்வதால்தான் இந்தோனேசிய மக்களுக்கு அதிகம் சிறுநீரக பிரச்சினைகள் ஏற்படுவதில்லையென்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
காய்கறிகள்:
பூண்டு, வெங்காயம், காரட், கத்திரிக்காய், முள்ளங்கி, பச்சைப் பட்டாணி, முட்டைக்கோஸ், காலிபிளவர்.
பழங்கள்:
ஆப்பிள், திராட்சை, எலுமிச்சை, பேரிக்காய், அன்னாசி, ப்ளம்ஸ், தர்பூசணிஎண்ணெய்: நல்லெண்ணெய், ஆலிவ்

தவிர்க்க வேண்டியவை
காய்கறிகள்: தக்காளி, புழுச்சைகீரை, உருளை, சர்க்கரைவள்ளி கிழங்கு
பழங்கள்: வாழை, மாம்பழம், பப்பாளி, ஆரன்ஜு, உலர் பழங்கள்
இந்த மருத்துவத்தின் செயல்முறை வீடியோவைக்  கீழ்காணும் லிங்கில் காணலாம் .
http://www.youtube.com/watch?v=ymsg0kS-0pQ





Wednesday, 27 May 2015

இலவச அக்குபங்சர் மருத்துவ சிகிச்சை முகாம் - 2015 - மார்ச்

இலவச அக்குபங்சர் மருத்துவ சிகிச்சை முகாம் 

2015 - மார்ச் மாதம்

ராணிப்பேட்டை அக்குபங்சர் அகாடமியில் பயிலும் மாணவ ஹீலர்கள்

வாலாஜா அருகே உள்ள பாகவெளி கிராமத்தில் உள்ள மக்களுக்கு இலவச அக்குங்சர் மருத்துவ சிகிச்சை அளித்தனர்



அதே  2015 - மார்ச் மாத இறுதியில்
 வாலாஜா நகரில் அமைந்துள்ள தீனபந்து அசிரமத்தில் உள்ளவர்களுக்கு  இலவச அக்குங்சர் மருத்துவ சிகிச்சை அளித்தனர்.


Thursday, 21 May 2015

வலிகளுக்கு உடனடி நிவாரணி



வலிகளுக்கு உடனடி நிவாரணி :

இரவு நேரம். திடீரென வயிற்று வலி, என்ன செய்வதென்று கை பிசைந்து கொண்டு நிற்கிறீர்களா?. மருத்துவமனைக்குப் போகாமலே நம் வீட்டில் அடுப்பங்கரையில் வைத்திருக்கும் பொருட்களைக் கொண்டே வலியைப் போக்க ஒரு எளிய வழி.


முதலில் வலிக்கும் பகுதியில் தோலின் மேற்பரப்பில் நல்லெண்ணையை (செக்கில் ஆட்டிய எள் எண்ணெய்) தடவி விடுங்கள். 

பின்னர் ஒன்று அல்லது இரண்டு சொம்பு தண்ணீரை கொதிக்க வைத்து அடுப்பில் இருந்து இறக்கிய பின் ஒரு கைப்பிடி அளவு கல் உப்பும், கூடவே ஒரு ஸ்பூன் மஞ்சள் தூளும் அதில் சேர்க்கவும். 

இரண்டையும் கரைத்த பின் ஒரு டர்க்கி டவலை எடுத்து இந்த நீரில் முக்கி, பிழிந்து விட்டு (எண்ணெய் தடவி மூன்று அல்லது நான்கு நிமிடங்கள் ஆகியிருக்கும் நிலையில்) எண்ணெய் தடவியிருக்கும் இடத்தின் மேல் டவலால் ஒத்தடம் கொடுக்கவும்.


எண்ணெய் இதனால் தோலின் மேற்பரப்பில் இருக்கும் நுண்ணிய துவாரங்களின் வழியே உடலுக்குள் ஊடுருவும். சூடான ஒத்தடம் இந்த ஊடுருவலுக்கு உதவும். ஒரு குழாயை இன்னொரு குழாய்க்குள் சொருக சிரமமாக இருக்கும். ஆனால் அதே குழாயை சிறிது சூடு செய்து விட்டு சொருகினால் எளிதாக போகுமே அது போலத்தான் இதுவும். 

இந்த ஒத்தடத்தை உடலில் எந்த பாகத்தில் வலி வந்தாலும் கொடுக்கலாம். உடனடி வலி நிவாரணியாக தற்காலிகமாக இது உங்களுக்கு உதவும். அதனால் உங்கள் வீட்டில் மருந்து, மாத்திரைகள் வைத்துக் கொள்வதற்கு பதிலாக அடுப்பங்கரையில் எப்பொழுதும் மஞ்சள் தூள், கல் உப்பு, நல்லெண்ணெய் போன்றவற்றை வைத்துக் கொண்டிருங்கள். இவை என்றும் உங்களுக்கு உதவும் மருத்துவப் பொருட்கள்.

Monday, 11 May 2015

உப்பு நீர் மருத்துவம்

உப்பு நீர் மருத்துவம் 

நம் உடலில் பல நோய்களுக்கும், மனதில் தோன்றும் பல குழப்பங்களுக்கும் பலபல காரணங்கள் உண்டு. அதில் ஒன்றுதான் NEGATIVE ENERGY / BLACK ENERGY. தமிழில் சொன்னால் இதை "எதிர் மறை சக்தி அலைகள் " எனலாம்.

நாம் தினமும் பல இடங்களுக்கு போகிறோம், பலரையும் சந்திக்கிறோம். அவர்கள் மூலம் அல்லது சில இடங்களில் கிடைக்கும் எதிர்மறை அலைகள் நம்மை தாக்குகின்றன. நம்மை சூழ்ந்து கொள்கிறன. அதன் தாக்கத்தால் நமது உள்ளமும் உடலும் பாதிக்கப்படுகின்றன.

சோர்வு, கை-கால் வலி, தூக்கக் குறைபாடு, மனதில் குழப்பம் என்று பல்வேறு விதமாய் பாதிக்கப்படுவோம்.

உடனே மாத்திரை போட்டுக் கொள்கிறோம். அல்லது மருத்துவரை நாடுகிறோம்.

சில நேரம் நம்மால் முடியாத போது எதிர்படுவோர் மீது எரிந்து விழுந்து BAD VIBRATION ஐ  நாமும் உருவாக்கி பரப்புகிறோம்.

அதை மிக மிக எளிய முறையில் சரி செய்யலாம்.

ஆன்மீக ஹீலிங்  முறையில் (SPIRITUAL HEALING) நம் வீட்டிலேயே நாமே எளிதாக செய்யலாம்.

இளஞ்சூடாக சூடு செய்யப்பட்ட வெந்நீரை  ஒரு பக்கெட்டில் எடுத்துக் கொள்ள வேண்டும்.அதில்  ஒரு கைப்பிடி அளவு (ஐந்து ஸ்பூன் அளவு) கல் உப்பு , ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள், மூன்று  ஸ்பூன் கடுக்காய்ப் பொடி சேர்க்க வேண்டும்.

 நாம் வசதியாக ஒரு நாற்காலியில் அமர்ந்து கொண்டு அந்த பக்கெட் நீரில் நம் இரு கால்களையும் மூழ்க வைக்க வேண்டும். நம் கணுக்காலுக்கு மேல் வரை கால்கள்  முங்கி இருக்க வேண்டும்.

மனதில் உங்களுக்கு பிரியமான இறைவனை நினைத்துக் கொண்டு கண்களை மூடிக்  கொண்டு சும்மா இருக்க வேண்டும்.

 இந்த நேரத்தில் உங்கள் மனதில் ஒரே எண்ணம்தான் இருக்க வேண்டும். அது உங்களின் கெட்ட அலைகள்  (BAD ENERGY / BLACK ENERGY) உங்களின் முழு உடலிலிருந்தும் கால்கள் வழியாக உப்பு நீருக்குள் இறங்குவதாக கற்பனை செய்ய வேண்டும். எங்கள் எண்ணமே செயல்.

இப்படியே பதினைந்திலிருந்து இருபது நிமிடங்கள் அமர்ந்திருக்க வேண்டும்.
பின்னர் கால்களை ஒரு துண்டால் துடைத்து விட்டு மறக்காமல் அந்த கெட்ட எனர்ஜி இறங்கியுள்ள நீரை கழிவறையில் கொண்டு சென்று ஊற்றி விடவேண்டும். வேறு எங்கும் ஊற்றி விடக் கூடாது.ஏனெனில் அது மோசமான தீங்கு விளைவிக்கும் நீராகும்.
பாக்கெட்டையும் நன்கு கழுவிய பின்தான் வேறு எதற்கும் உபயோகிக்க வேண்டும்.

இனி போய் படுங்கள். சுகமான உறக்கம் உங்களைத் தழுவும்.

செய்முறை வீடியோவை கீழுள்ள படத்தின் மேல் கிளிக் செய்து காணலாம்.

Salt water treatment (Spiritual healing)


மேலும் விபரங்கள் தேவைப்படுவோர் இராணிப்பேட்டை அகுபங்சர் அகாடமியை தொடர்பு கொள்ளவும்.

கைபேசி எண் : 97900 99358


Tuesday, 5 May 2015

மலச்சிக்கலுக்கு வர்ம சிகிச்சை:

மலச்சிக்கலுக்கு வர்ம சிகிச்சை:



வர்ம முறைப்படி நம் உடலின் 12 முக்கியமான உறுப்புகளும் 12 மெரிடியன்களால் இணைக்கப்பட்டுள்ளன. இந்த மெரிடியன்களின் வழியே 24 மணி நேரமும் சக்தி பாய்கிறது. ஒவ்வொரு மெரிடியனிலும் 2 மணி நேரம் என 12 மெரிடியன்களில் 24 மணி நேரம் சக்தி பாய்கிறது.
பெருங்குடல் மெரிடியனில் சக்தி பாயும் நேரம் காலை 5 மணி முதல் 7 மணி வரையாகும். அதனால், காலை 6 முதல் 7 மணிக்குள் நாம் மலம் கழிக்கும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால் மிகவும் நல்லது. 1 வாரம் சிறிது பொறுமையுடன் இந்த நேரத்தில் மலம் கழிப்பதற்கு நாம் முயற்சி செய்ய வேண்டும். 2 அல்லது 3 டம்ளர் நீர் குடித்து வீட்டினுள்ளேயே சிறிது நேரம் நடக்க வேண்டும். பிறகு முன்புறமாக குனிந்து பாதங்களைத் தொடும் பயிற்சி செய்ய வேண்டும். இதனால், அடிவயிறு அழுத்தப்பட்டு மலம் கீழுக்குத் தள்ளப்படுகிறது.
வாய்க்குக் கீழே முகவாயில் உள்ள புள்ளியிலும், தொப்புளுக்கு கீழே 2 விரல்கள் தள்ளி உள்ள புள்ளியிலும், பக்கவாட்டில் இருபுறங்களிலும் 3 விரல்கள் தள்ளி உள்ள புள்ளிகளிலும் அழுத்தம் கொடுத்து விலக்க வேண்டும். டாய்லெட்டில் உட்கார்ந்து கழுத்துப் பயிற்சி செய்தாலும் மலம் இறங்கி வரும். தலையை முன்னும் பின்னும் பக்கவாட்டில் திருப்பும் பயிற்சி செய்யும்போது, மலம் கழிப்பது சுலபமாகிறது.

இரைப்பை மெரிடியனில் காலை 7 மணி முதல் 9 மணி வரை சக்தி பாய்கிறது. காலை 9 மணிக்கு நாம் முழு உணவு உண்போமேயானால் உணவு நன்கு செரிக்கப்பட்டு மலச்சிக்கல் தீரும். இப்போதுள்ள அவசர யுகத்தில் பலர் காலையில் காபி அல்லது கஞ்சி குடித்துவிட்டு பிறகு மெதுவாக மதியம் உணவு உண்கின்றனர். கேட்டால் ‘நேரம் இல்லை’ என்ற பதில் கிடைக்கிறது. படத்தில் காட்டப்பட்டுள்ள ஆள்காட்டி விரலின் கடைசிப் பகுதியில் உள்ள புள்ளி லிமி4 என்ற பெருங்குடல் மெரிடியனில் நான்காவது புள்ளியாகும்.
கட்டை விரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் இடையில் இப்புள்ளி உள்ளது. இடையிலுள்ள சதைப்பகுதியில் அழுத்தம் கொடுக்கக்கூடாது. ஆள்காட்டி விரல் எலும்பின் கடைசிப் பகுதியில் அழுத்தம் கொடுக்க வேண்டும். இப்புள்ளியை தினமும் காலை 14 முறைகளும், மாலை 14 முறைகளும் அழுத்தம் கொடுத்து விலக்க வேண்டும். இரு கைகளிலும் செய்ய வேண்டும். இதனால் மலச்சிக்கல், அசிடிடி, வாயுத் தொல்லை முதலியவை தீருகின்றன. வராமல் தடுக்கப்படுகின்றன.
மலச்சிக்கலினால் உடல் மந்தம், வாய்வுத் தொல்லை, தலைவலி, பசியின்மை, து}க்கமின்மை, உடல் நாற்றம், மூலம், பௌத்திரம், சிறுகுடல் சம்பந்தப்பட்ட கொலைடிஸ், சிறுகுடல் புற்றுநோய் இவை ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. ஆகவே, மலச்சிக்கலை நாம் அலட்சியம் செய்யாமல் அதற்குத் தீர்வு காண வேண்டும்.
நாம் நமது ஆயுளின் முதல்பாதியில் உடல் நலத்தை அலட்சியம் செய்து பணம் சம்பாதிப்பதிலேயே குறியாக இருக்கிறோம். பிற்பகுதியில் கெட்டுப்போன நம் உடல் நலத்தை சீராக்குவதற்கு சம்பாதித்த பணத்தை செலவு செய்கிறோம். எல்லோரும் இதை யோசித்து உடல்நலத்தை எப்போதும் பேணிக் காக்க வேண்டும்.
அறிவியல் ரீதியாக நடந்திருக்கும் ஆராய்ய்ச்சி முடிவு சொல்கிறது, மனிதன் தனது கழிவுகள் வெளியேற்றம் செய்யும் பொழுது அவன் அமர்ந்த முறையில் அதாவது மேற்கத்திய கழிவறைகளில் உட்கார்ந்து போகும் முறை தவறானது மற்று பல நோய்களை ஏற்படுத்த முக்கிய காரணமாக இருக்கும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். சரி அதாவது போகட்டும் நம்ம ஊரில் என்ன பண்றானுங்க.. நாமலும் இந்த சமுகத்தில் வளர்ந்தவன் என்று காட்ட கழிவறைகளை கூட மாற்றி விடுகின்றனர்.
மலச்சிக்கல் ஏற்படுவதின் காரணங்களும் தீர்வுகளும்:
1. நமது சமிபாடு வாய், இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல் என்று நான்கு நிலைகளில் செயல்படுகிறது. இதில் எந்த நிலையில் தடை ஏற்பட்டாலும் மலச்சிக்கல் ஏற்படும். ஆகவே, சமிபாடு நன்கு நடைபெறும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.
2. போதிய அளவு நீர் குடிக்காததால் மலச்சிக்கல் ஏற்படும். காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் 2 அல்லது 3 கோப்பைகள் நீர் அருந்த வேண்டும். நீரில் எலுமிச்சை சாறு கலந்தும் குடிக்கலாம். சிலர் 2 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று கூறுவர். இது சரியல்ல. அதிக அளவு நீர் குடித்தால் சிறுநீரகங்களின் வேலை அதிகமாகி பாதிப்பு ஏற்படலாம்.
3. நாம் உண்ணும் உணவில் நார்ச்சத்து குறைவாக இருந்தால், மலச்சிக்கல் ஏற்படும். வெள்ளை ரொட்டி, கேக், பிஸ்கட், ஜாம், க்ரீம், துரித உணவுகள், டின்களில் பாதுகாக்கப்பட்ட உணவுகள் இவை மலச்சிக்கலை ஏற்படுத்தும். கீரைகள், காய்கறிகள், பழங்கள் இவற்றில் நார்ச்சத்துகள் அதிகம் உள்ளன.
4. வேலை தொந்தரவினால் மலம் கழிக்கும் உந்துதல் வரும்போது சிலர் அதை அடக்கி வைத்துக் கொள்வர். இதனால், மலம் உள்ளுக்குள் தள்ளப்பட்டு சிக்கலை உருவாக்குகிறது. காலையில் எழுந்ததும் நமது காலைக் கடன்களில் மலம் கழித்தலை முக்கிய கடமையாக நினைத்துச் செயல்பட வேண்டும்.
5. வயதானவர்களுக்கும், போதிய உடற்பயிற்சி இல்லாதவர்களுக்கும் மலச்சிக்கல் ஏற்படும். வயதானவர்கள் அதிக சத்துள்ள உணவுகள், காய்கறிகள், பழங்கள், நார்ச்சத்துள்ள உணவுகள் இவற்றை சேர்த்துக்கொள்ள வேண்டும். அவரவர் வயதிற்கேற்ப காலையில் சுமார் அரைமணி நேரமாவது எளிய உடற்பயிற்சிகள் செய்யலாம். நடைப்பயிற்சி செய்யலாம்.
6. பெருங்குடல், சிறுகுடல் பகுதிகள் பாதிக்கப்பட்டால் அல்லது அடைப்புகள் ஏற்பட்டால் மலம் கழித்தல் சிரமமாக இருக்கும். இந்த அடைப்புகளை நீக்க மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.
7. மலச்சிக்கல் ஏற்பட்டால் சிலர் உடனே மலமிளக்கி மருந்துகளை நாடுவர். இம்மருந்துகள் சில நாட்களுக்குத்தான் பலன் தரும். பிறகு மருந்துகளின் அளவை அதிகரிக்க வேண்டிவரும். இம்மருந்துகளால் குடல் பலவீனமடைகிறது. உடலில் வைட்டமின் சத்துக்களை உட்கிரகிக்கும் சக்தி குறைந்துவிடும். ஆகவே, இம்மருந்துகளைத் தவிர்த்து இயற்கையான முறைகளைப் பின்பற்ற வேண்டும். மருந்திற்குப் பதில் இவர்கள் இனிமா எடுத்துக்கொள்ளலாம். இயற்கை வைத்தியத்தில் உபயோகிக்கும் எளிமையான இனிமா கருவி ‘காதிபவன்’ கடைகளில் கிடைக்கும். சில நாட்களுக்கு எனிமா எடுத்துக்கொண்டால் பிறகு இயற்கையாகவே மலம் கழிக்கும் பழக்கம் வந்துவிடும்.
                                                                                                                   நன்றி : சிவராஜா
                                                                                                                                   Healer Baskar anatomictherapy face book page

Saturday, 2 May 2015

மனசு போல வாழ்க்கை- 5: எதை நினைத்தோமோ அதுவே நடந்தது

மனசு போல வாழ்க்கை- 5: எதை நினைத்தோமோ அதுவே நடந்தது 

-  கெம்பா கார்த்திகேயன்

“எது நடக்கக் கூடாதுன்னு நினைச்சேனோ அது அப்படியே நடந்தது!” என்று பலர் சொல்வதைக் கேட்டிருக்கிறோம். ஏன் இப்படி நடக்கிறது? காரணம் அது நடக்கக் கூடாதுன்னு அதையே நினைத்ததால் அதுவே நடந்தது!
பெரிய கண்ணாடி டம்ளரில் வழிய வழிய தண்ணீரைக் குழந்தை கொண்டு சென்றால், “கீழே போடப் போறே...ஜாக்கிரதை!” என்று அலறியவுடன் அது கை நழுவிப் போட, அங்கிருந்து அம்மா சொல்வாள்: “எனக்குத் தெரியும். நீ கீழே போடுவேன்னு. அதனாலதான் கத்தினேன்!” அவருக்குத் தெரியாதது, அவர் குழந்தை கீழே போடுவதை எண்ணிப் பயத்தில் கத்தியதால்தான் குழந்தை மிரண்டு போய்க் கீழே போட்டது என்று.
நம்பிக்கையும் நிகழ்வும்
இதுதான் self fulfilling prophecy எனும் உளவியல் கோட்பாட்டின் சாரம். நம் நம்பிக்கைகளுக்கு ஏற்ப நிகழ்வுகள் நடந்து அவை நம் நம்பிக்கைகளை வலுப்படுத்தும்.
“அவன் ஒரு ஆள் போதும் சார். அத்தனையும் தானா முடிப்பான்!” என்று பாஸ் நம்பிக்கை வைக்கும் போது அந்தப் பணியாளரின் வேலைத்திறன் தானாகவே உயர்கிறது. தன்னம்பிக்கை, திறமை, முயற்சி, பெருமை என அனைத்தும் இசைந்து ஒரு அற்புதம் நிகழும். பின் பாஸ் சொல்வார்: “நான் சொல்லலை? அவன் கிட்ட விட்டால். பிரமாதப்படுத்துவான்னு!”
நிர்வாகம் முழு மனதாகத் தொழிலாளர்களை மதித்து, நம்பிக்கை வைத்துப் பொறுப்புகள் கொடுக்கும் போது நல்லுறவு மட்டுமல்ல, உற்பத்தித் திறனும் பன்மடங்கு பெருகும் என்பது ஆயிரக்கணக்கான நிறுவனங்கள் ஆவணப் படுத்தியுள்ள உண்மை. இருந்தும், “இவனுங்க பேச்சை எல்லா விஷயங்களிலும் கேட்டா எதிர்பார்ப்பு அதிகமாயிடும். உடனே சரின்னு எதையும் சொல்லக் கூடாது.
எப்பவும் கொஞ்சம் இழுத்துப் பிடிக்கணும். இல்லேன்னா, பிரச்சினை பண்ணுவாங்க!” என்று நினைக்கும் நிர்வாகங்கள் அனைத்தும் தொழிலாளர் பிரச்சினைகளைக் கண்டிப்பாகச் சந்திக்கும். நிர்வாகத்திடம் உள்ள தொழிலாளர் பற்றிய ஆதார நம்பிக்கைகள்தான் தொழிலாளர்களை அப்படி நடந்து கொள்ள வைக்கிறது என்பதைப் பெரும்பாலும் நிர்வாகத்தினர் அறிவதில்லை.
நடக்காது என்பார் நடந்துவிடும்
“நடக்கக் கூடாது” என்று நினைக்கும் போது அந்த எதிர்மறை எண்ணம் வலுப்படும். அச்சமும் பதற்றமும் ஏற்படும். தற்காப்பு நடவடிக்கைகள் எடுப்போமே தவிர இயல்பான முயற்சியை மகிழ்ச்சியான முறையில் எடுக்க முடியாது. அது தவறுகளுக்கும் அபிப்பிராயப் பேதங்களுக்கும் வழி வகுக்கும். எதிராளி இருந்தாலும் அவரிடமும் அச்சத்தையும் நம்பிக்கையின்மையை வளர்க்கும். பின் பயந்தது போலவே தோல்வி நிகழும்.
‘சின்ன தம்பி’ படத்தில் யாரையும் தங்கை காதலித்துக் கல்யாணம் செய்து கொள்ளக்கூடாது என்பதில் மூன்று சகோதரர்களும் படு தீவிரமாக இருக்க, கடைசியில் அதுவே நிகழும். அவர்கள் தங்கையைத் தனிமைப்படுத்தி, ஆண்கள் சகவாசம் கிடைக்காமல் செய்ய, கிடைத்த முதல் தொடர்பிலேயே காதல் கொள்வாள் நாயகி. இது பல வீடுகளில் நடக்கும் உண்மைச் சம்பவம்.
இதிகாசங்களும் இதை மீண்டும் மீண்டும் உணர்த்துகின்றன. தன் மகன் இடிபஸ் தன்னைக் கொல்வான் என்பதால் அவனுடைய அப்பா அவனைக் குழந்தையிலேயே தள்ளி வைக்கிறார். வளர்ப்புப் பெற்றோரிடம் வளர்வான் மகன். தன் அப்பா என்று தெரியாமலேயே அவரை வென்று கொல்வான். இதுதான் கிரேக்க இதிகாசத்தில் உள்ள இடிபஸின் கதை. மகன் பற்றிய அப்பாவின் எண்ணம் தான் இதன் ஆரம்பம்.
ஊத்திக்கொள்பவர்கள்
தொடர்ந்து வியாபாரத்தில் தோற்பவர்கள் எனக்குப் பல பேரைத் தெரியும். ஒவ்வொரு முறை ஒவ்வொரு காரணம் சொல்வார்கள். அடிப்படையில் அவர்கள் தோல்வியை எதிர்பார்த்தே வியாபாரத்தில் இறங்குவார்கள். “இந்த வாட்டியும் நஷ்டம் ஆகக் கூடாதுன்னு எல்லாம் பாத்து பாத்து செஞ்சேன். நம்ம ராசி இதுவும் ஊத்திக்கிச்சு!” என்பார்கள்.
அதே போலச் சிலர் திருமண வாழ்வில் தொடர்ந்து தோல்விகளைச் சந்திப்பார்கள். ஆள் மாறினாலும் பிரச்சினை மாறாது. காரணம் பிரச்சினை துணையிடம் இல்லை. தங்களிடம்தான் உள்ளது என்பதை அவர்கள் உணர்வதில்லை.
எந்த வேலையிலும் நிலையாகத் தங்காதவர்கள், எல்லாரிடமும் சீர்குலைந்த உறவு கொண்டிருப்போர், தொடர்ந்து நோய்வாய்ப்பட்டுக்கொண்டே இருப்பவர்கள், எப்போதும் பணத் தட்டுப்பாட்டில் இருப்பவர்கள் என அனைவருமே ஏதோ சில ஆதார எண்ணங்களில் குறைபட்டவர்கள். அந்த எண்ணம் தரும் உணர்வும் செயல்பாடும் அவர்களுக்கு அவர்கள் வெறுக்கும் அதே முடிவுகளைத்தான் தருகின்றன.
பட்டியலிடுங்கள்
நமக்குப் பிரச்சினை என்று நாம் நினைக்கும் விஷயங்களில் நம் ஆதார எண்ணங்கள் என்னென்ன என்று பட்டியல் போடுங்கள். அது பிடிபடவில்லை என்றால் உங்களிடம் அதிகம் பழகும் நண்பரிடமோ, வாழ்க்கைத் துணையிடமோ, சக பணியாளர்களிடமோ கேளுங்கள். உங்கள் பேச்சு, உங்கள் எண்ணங்களை அவர்களுக்குக் காட்டிக் கொடுத்திருக்கும். அவர்கள் மிக எளிமையாக உங்கள் எண்ணங்களைச் சொல்லுவார்கள்.
உங்கள் நம்பிக்கைகளை நேர்மறையாக மாற்றுவது எப்படி என்று மிக விரிவாக, நவீன உத்திகளுடன் சொல்லித் தருகிறேன். ஆனால் அதற்கு முன் உங்களிடமுள்ள எண்ணங்களை முழுவதும் ஆராயுங்கள்.
வெறும் எண்ணத்தை மாற்றினால் எல்லாம் சரியாகிவிடுமா? வெளியிலிருந்து வரும் பிரச்சினைகளை என்ன செய்வது?
முதலில் உங்கள் எண்ணங்களை மாற்ற வேண்டும் என்று முடிவு செய்யுங்கள். வெளியிலிருந்து வரும் பிரச்சினைகளைச் சமாளிக்கத் தேவையான அளவு பலமான எண்ணங்கள் தானாகத் தோன்றும்.
ஒரு நாளில் 35 ஆயிரம்
“நீ என்ன நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிவிடுவாய்’’ என்றார் புத்தர். நீங்கள் ஒரு நாளில் அதிக நேரம் சிந்திப்பவை என்று கணக்கிடுங்கள். அவற்றில் எவையெல்லாம் நேர்மறை, எவையெல்லாம் எதிர்மறை என்று கணக்கிடுங்கள்.
ஒரு அதிர்ச்சிகரமான உளவியல் உண்மை சொல்லட்டுமா?
சமீபத்திய ஆய்வில் சொல்லியிருக்கிறார்கள். சராசரியாக ஒரு நாளைக்கு 35 ஆயிரம் எண்ணங்கள் நமக்கு வருகின்றனவாம். இது உங்கள் மனோபாவத்துக்கும் வேலைக்கும் ஏற்ப, கூடும், குறையும். அது முக்கியமில்லை. ஆனால் அவற்றில் 80 சதவீதம் எதிர்மறையானவை. அதுவும் ஒன்று அல்லது இரண்டு விஷயங்களைப் பற்றித்தான் முழு நேரமும் யோசிக்கிறோமாம்!
ஆக, நாள் முழுவதும் ஏதாவது ஒரு விஷயத்தை நினைத்துக் கவலையோ, பயமோ, கோபமோ கொண்டிருக்கிறோம். அதன் விளைவுகளை நம் உடலில், வேலையில், வாழ்க்கையில் தொடர்ந்து அனுபவித்து வருகிறோம்.
உங்கள் வாழ்க்கையின் எந்தெந்த விஷயத்துக்காக, என்ன என்ன எண்ணங்களைத் தற்போது வைத்துள்ளீர்கள் என்று பாருங்கள்.
இந்த ஆய்வின் முடிவில் நீங்கள் மகிழ்ச்சியாக இருந்தால் இந்தத் தொடரைத் தொடர்ந்து படிக்காவிட்டலும் பரவாயில்லை. ஆய்வின் முடிவு அதிருப்தியைக் கொடுத்தால் உங்கள் வாழ்க்கையை நீங்கள் விரும்புவது போல மாற்ற இந்தத் தொடரைத் தொடர்ந்து படியுங்கள்!

நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் 21.04.2015

மருத்துவத் துறையைச் சீரழித்து வரும் நோய்கள்!

மருத்துவத் துறையைச் சீரழித்து வரும் நோய்கள்!

சில பத்தாண்டுகளுக்கு முன் இதய நோய் அல்லது சிறுநீரகச் செயலிழப்பு போன்ற நிலைவந்தால், ஏழை எளிய மக்கள் விதி முடிந்துவிட்டது என்பதாக, மரணத்தை எதிர்கொள்வதாக இருந்த நிலை இன்று மாறியிருக்கிறது. ஆனால், இது எப்படிப்பட்ட மாற்றம்? காசு இருந்து செலவு செய்தால் இந்நோய்களைக் குணப்படுத்த இயலும் அல்லது மரணத்தை ஒத்திப்போட முடியும். மருத்துவத் துறையில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றங்கள், அரசு ஆதரவு, காப்பீடு பாதுகாப்பு இல்லாத நிலையில், அடித்தட்டு மக்களை மட்டுமல்ல, நடுத்தர வர்க்கத்தைக்கூடப் பெரும் கடனாளியாக மாற்றிவிடுகிறது. மகாராஷ்டிரம், பஞ்சாப், ஆந்திரம் முதலான மாநிலங்களில் விவசாயிகளின் தற்கொலைகள் குறித்து விரிவாக ஆய்ந்து தொடர்ந்து எழுதிவரும் பத்திரிகையாளர் பி.சாய்நாத், இத்தற்கொலைக்கான காரணங்களில் ஒன்று மருத்துவச் செலவு என்று நிறுவியிருக்கிறார். அதாவது, நோயினால் சாவு என்ற நிலை மாறி, நோய்க்குச் செய்த செலவால் சாவு என்ற நிலையைத்தான் மருத்துவத் துறையில் புகுத்தப்பட்டுள்ள தனியார்மயம் ஏற்படுத்தியிருக்கிறது.

“கிட்னி, லிவர், ஹார்ட்..” – ரெண்டு வாங்குனா ஒண்ணு ஃப்ரீ
வெளிநாட்டு வாடிக்கையாளர்களுக்கு நம்மூர் எளிய மக்களின் சிறுநீரகங்களையும் இதர உடல் உறுப்புகளையும் அறுத்து விற்பதற்கு இங்கு சில மருத்துவர்களும் தனியார் மருத்துவமனைகளும் தயங்குவதில்லை. இந்திய அளவில் கிட்னி வியாபாரம் மருத்துவச் சுற்றுலாவுடன் இணைந்திருப்பதை நாம் கவனிக்க வேண்டும். பல விவசாயிகளின், நெசவாளர்களின் கிட்னி காணாமல் போனது இப்படித்தான்.
இந்தியாவின் மருத்துவத் தலைநகராக சென்னை கருதப்படுகிறது. இந்தப் ‘பெருமை’யை சென்னை பெற்றதற்கான முக்கிய காரணம், உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சைதான். சென்னை வில்லிவாக்கத்துக்கு மருத்துவத் துறை சூட்டியிருக்கும் பெயர் “கிட்னிவாக்கம்”. அந்தளவிற்கு அங்கு கிட்னி வியாபாரம் அரசிற்குத் தெரிந்தே நடந்தது. 2004-ம் ஆண்டு சுனாமி சென்னை மீனவர்களின் வாழ்க்கையைக் குலைத்துப் போட, வறுமையைச் சமாளிக்க மீனவப் பெண்கள் பலர் தங்கள் கிட்னிகளை விற்றார்கள். அப்போதைய கமிஷனர், “29 மீனவப் பெண்களிடம் கிட்னி திருட்டு நடந்துள்ளது. சென்னையில் ஐந்து மருத்துவமனைகளும், மதுரையில் மூன்று மருத்துவமனைகளும் இதில் ஈடுபட்டுள்ளன என்று எங்கள் விசாரணையில் தெரியவந்துள்ளது” என்றார். இத்திருட்டையொட்டி 13 மருத்துவமனைகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டாலும், அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி அனைவரும் தப்பித்துக் கொண்டனர். இப்போது கிட்னி திருடர்கள் சென்னை கடற்கரையில் இருந்து தங்களின் முகாமை நாமக்கல், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரிக்கு மாற்றியிருக்கிறார்கள்.

மருத்துவர்கள் – மருந்து கம்பெனிகளின் சட்டவிரோதக் கூட்டு
மருத்துவர்கள் நோயாளிகளுக்கு மருந்துகளைப் பரிந்துரைக்கும்போது மருந்துகளின் பொதுப்பெயரில் அல்லாமல், வியாபாரப் பெயரில் பரிந்துரை செய்கின்றனர். நோயாளிகளுக்கு எந்த மருந்தை எதற்காகச் சாப்பிடச் சொல்கிறார்கள் என்றோ, எந்த மருந்தில் என்னென்ன கூட்டுப் பொருட்கள் கலக்கப்பட்டுள்ளன என்றோ, அது அவசியமா என்றுகூடத் தெரியாது. இந்த நிலையில் தன்னுடைய நோய்க்கு விலை குறைவான மருந்தே போதுமானது என்றாலும்கூட, மருத்துவர் பரிந்துரை செய்த விலையுயர்ந்த மருந்துதான் தன்னுடைய உடலுக்கு ஏற்றது, மற்றதை வாங்கிச் சாப்பிட்டால் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டுவிடும் என்றும் நோயாளி அஞ்சுகிறார்.
உதாரணமாக, ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் மாத்திரைகள், ஒரு நிறுவனத்தால் 10 மாத்திரைகள் கொண்ட அட்டை வெறும் 25 ரூபாய்க்கும் இன்னொரு நிறுவனத்தால் ரூ 385-க்கும் விற்கப்படுகின்றன. நீரழிவைக் கட்டுப்படுத்த 10 மாத்திரைகள் ரூ 133 என்ற விலையில் முன்னணி மருந்து நிறுவனத்தால் விற்கப்படுகிறது. அதே மாத்திரை மற்றொரு நிறுவனத்தால் வெறும் 40 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. நோயாளிகளுள் பெரும்பாலோர் ஏழைகள்தான். மருத்துவத்துக்கே தங்களுடைய வருவாயில் அல்லது சேமிப்பில் அதிகபட்சம் செலவிடுகிறார்கள். மக்களுடைய நல்வாழ்வில் அக்கறை செலுத்த வேண்டிய எந்த அரசும் இந்த விலை வித்தியாசத்தைக் கண்டும் காணாமல் இருக்க முடியாது. ஆனால், மருந்து உற்பத்தி நிறுவனங்களோ போதுமான இலாபம் என்பதில் திருப்தி கொள்ளாமல், கொள்ளை லாபம் என்ற இலக்கில் ஏழை நோயாளிகளைச் சுரண்டுகின்றன. தனியார் நிறுவனங்களுக்குக் கட்டற்ற சந்தையை அமைத்துக் கொடுத்ததன் விளைவுதான் இது.

மருந்துகளின் விலை உயர்வுக்கு அப்பால், போலி மருந்துகளும், தடை செய்யப்பட்ட மருந்துகளும் இந்தியாவில் தாராளமான புழக்கத்தில் உள்ளன. பன்னாட்டு மருந்து கம்பெனிகளின் இலாபத்தை முன்னிட்டு போலி மருந்துகளின் புழக்கத்தைக் கட்டுப்படுத்த மேம்போக்கான நடவடிக்கைகளை எடுக்கத் துணியும் அரசும் அதிகார வர்க்கமும், அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் தடை செய்யப்பட்ட மருந்துகளை இந்தியாவில் விற்பனை செய்வதற்குச் சட்டபூர்வ அனுமதி அளிக்கின்றன.
மருத்துவத் துறையின் இன்னொரு அருவெறுக்கத்தக்க கோர முகம், அதில் புரையோடிப் போயிருக்கும் ஊழல். உலகெங்கும் ஆண்டுக்கு 7.2 இலட்சம் கோடி டாலர் சுகாதாரத் துறைக்காகச் செலவிடப்படுவதாகக் கூறுகிறது, உலக சுகாதார நிறுவனம். இதில் 10 முதல் 25 சதவீதம் வரை ஊழலில் கரைந்துவிடுகிறது என்பது வெறும் பொருளாதாரம் சார்ந்த பிரச்சினையல்ல. ஒரு சாமானியக் குடும்பம் தன் சகல சந்தோஷங்களையும் இழக்க இன்றைக்கெல்லாம் அந்த வீட்டுக்கு ஒரு நோயாளி போதும். அதுவும் புற்று நோயாளிகள், சிறுநீரக நோயாளிகள் என்றால், உடலும் மனமும் துடிதுடிக்க அந்தக் குடும்பமே துயரத்தைச் சுமக்க வேண்டும். தமது பல நாள் உழைப்பின் மொத்த பலன்களையும் மருத்துவமனையின் மேஜையில் கொண்டுவந்து கொடுத்து, பரிதவித்து நிற்கும் இப்படிபட்ட துயரர்களிடம் நடத்தப்படும் ஊழல், கட்டணக் கொள்ளையைவிடக் கொடூரமானது.

இலவச மருத்துவ சேவை: சலுகை அல்ல, உரிமை
சீனா அடிப்படையான மருத்துவ நலத்தில் பாராட்டத்தக்க தன்னிறைவைப் பெறக் காரணமாக இருந்தது அந்நாட்டு அரசின் விருப்புறுதி மட்டுமே அல்ல. அவர்கள் மேற்கொண்ட வழிமுறையும் முக்கிய காரணமாகும். அந்நாட்டில் மருத்துவம் தொடர்பாக “ரூல் 57″ என்றொரு சட்டவழிமுறை ஏற்படுத்தப்பட்டது. இதன்படி,
1. ஆங்கில மருத்துவம் பயின்ற ஒவ்வொருவரும் கட்டாயமாக உள்நாட்டு மருத்துவமான அக்குபஞ்சர் உள்ளிட்ட ஆறு அங்கங்களை உள்ளடக்கிய பாரம்பரிய சீன மருத்துவத்தைப் பயின்றால் மட்டுமே மருத்துவப் பதிவு வழங்கப்படும்.
2. வெளிநாட்டிலிருந்து ஆங்கில மருந்துகளை இறக்குமதி செய்ய வேண்டியுள்ளபோது, அது உள்நாட்டு மருந்துகளைவிட சிகிச்சையளவில் உயர்வானதென நிரூபித்தால் மட்டுமே உரிமம் கிடைக்கும்.
3. கிராமப்புறங்களிலும் தொழிலமைப்புகளிலும் சுமார் ஒன்றரை இலட்சம் பேர் அடையாளம் காணப்பட்டு வெறுங்கால் மருத்துவர்கள் என அங்கீகரிக்கப்பட்டு, பகுதி நேரமாக மருத்துவப் பணியாற்றப் பணிக்கப்பட்டனர்.
வெறுங்கால் மருத்துவர்கள் தொடர் புத்தாக்கப் பயிற்சிகளின் ஊடாக தங்களை ஊரக மருத்துவ நலப் பயிற்சியாளர்களாக வளர்த்துக் கொள்ள வாய்ப்பளிக்கப்பட்டனர். இப்படி படிப்படியாகத் தன்னை வளர்த்துக் கொண்ட வெறுங்கால் மருத்துவர்களில் ஒருவர்தான் தற்போதைய சீனாவின் மத்திய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சூ சென்.
மருத்துவத்தை சமூகமயமாக்கும் நோக்கத்தோடு 1978-ல் நடந்த சர்வதேச நாடுகளின் கூட்டமொன்றில் உருவாக்கப்பட்ட அல்மா ஆடா தீர்மானத்திற்கு அடிப்படையாக இருந்தது சீனாவின் வெறுங்கால் மருத்துவ முறைதான்.
இந்தியாவில் தற்பொழுது நடைமுறையிலுள்ள கார்ப்பரேட் மருந்து கம்பெனிகள், தனியார் மருத்துவமனைகள் நலன் சார்ந்த சுகாதாரக் கொள்கைக்குப் பதிலாக மக்கள் நலனை முன்னிறுத்தும் வெறுங்கால் மருத்துவர்கள் போன்ற கொள்கை வகுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும்பொழுதுதான் அனைவருக்குமான அடிப்படை மருத்துவ மற்றும் சுகாதார நலனை உறுதிப்படுத்த முடியும்.

நன்றி :  வினவு  வலை தளம்

ஏசி வாங்கி வைக்க நினைபவர்கள் சற்று படியுங்கள் பிறகு ஏசி வைக்க சிந்தியுங்கள்!!!

ஏசி  வாங்கி வைக்க நினைபவர்கள் சற்று படியுங்கள் பிறகு ஏசி வைக்க  சிந்தியுங்கள்!!!
‘ராத்திரி முழுக்க‌ ஒரே புழுக்கம்… தாங்கவும் முடியல… தூங்கவும் முடியல… எவ்வளவு செலவானாலும் பரவால புது ஏசி வாங்கி வீட்ல மாட்டப்போறேன்!’’ இப்படி அங்கலாய்த்துக் கொள்பவரா நீங்கள்? அப்போது நீங்கள்தான் முதலில் இதைப் படிக்க வேண்டும்!

ஒரு காலத்தில் ஏர்கண்டிஷனர் சாதனம் ஆடம்பரப் பொருளாக இருந்தது. காலத்தின் தேவையில் அலுவலகங்கள் குளிர்சாதன வசதிக்கு மாறிவிட்டன. இதனால் ஏசியின் குளுமைக்கு பெரும்பாலான மக்கள் பழகிப்போனார்கள். வீட்டிலும் ஏசி பயன்படுத்துவது அதிகரித்தது.

இங்குதான் பிரச்சனையே ஆரம்பம். தொடர்ந்து ஏர் கண்டிஷன் செய்யப்பட்ட அறைகளில் அமர்ந்து வேலை செய்வதால் உடலியல் சார்ந்த பல பிரச்சனைகளும், நோய்களும் ஏற்படுவதாக சமீபத்திய மருத்துவ ஆய்வுகள் எச்சரிக்கின்றன. ஏசியால் ஏற்படும் விளைவுகள் குறித்தும், அதை எவ்வாறு தவிர்ப்பது என்பன பற்றியும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஏசியால் ஏற்படும் விளைவுகள் :

‘‘இன்று குளிர்சாதன வசதி என்பது மிகவும் இன்றியமையாததாக மாறிவிட்டது. ஏசியில்வரும் காற்றானது இயற்கையானது கிடையாது. இயற்கையான காற்றில் இருந்து ஈரப்பதத்தை எடுத்து, அதைப் பயன்படுத்திக் குளிர் காற்றாக கொடுக்கிறது. இன்னொரு புறம் அறையில் உள்ள வெப்பமான காற்றை வெளியேற்றுகிறது. இதற்கு ‘குளோ ரோஃப்ளுரோ கார்பன்’ மூலப் பொருளாகப் பயன்படுகிறது. இது வெளியேற்றும் உஷ்ணக் காற்றால்தான் புவி வெப்பமடைதல் அதிகமாகி ஓசோன் ஓட்டையை அதிகப்படுத்துகிறது.

ஏற்கனவே ஒவ்வாமை பிரச்சனை (அலர்ஜி) உள்ளவர்களுக்கு ஏசி காற்று பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். கூருணர்ச்சி (Hyper Reactive) அதிகமாக உள்ளவர்களுக்கு உடலில் சொறி, அரிப்பு, மூக்கில் சளி ஒழுகுதல், காதில் அரிப்பு, கண் எரிச்ச ல் போன்றவை ஏற்படக்கூடும். அலர்ஜி உள்ளவர்கள் ஏசியில் இருந்து விலகி இருப்பதே நல்லது.

குறைந்தது 3 மாத ங்களுக்கு ஒரு முறை ஏசியிலுள்ள தூசி மற்றும் அழுக்குகளை முறையா கச் சுத்தப்படுத்த வேண்டும். இல்லை எனில், அவற்றில் லிஜினல்லா நிமோபிலியா என்ற பாக்டீரியா வளரும். இது ஏசியில் மட்டும் வளரக்கூடிய பாக்டீரியா. சுவாசப் பாதையில் இவ்வகை பாக்டீரியா பரவினால் கடுமையான நிமோனியாவை உருவாக்கும்.

சில வீடுகளில் விண்டோ ஏசியில் பின்பக்கம் புறாக்கள் வசிக்க ஆரம் பிக்கும். புறாக்களின் கழிவுகள் அதில் சேர்ந்துவிடும். இதில் பூஞ்சைகள் வளரும். கிரிப்டோகாக்கஸ் எனப்படும் பூஞ்சையானது மனித மூளையைத் தாக்கக் கூடியது. இந்தப் பூஞ்சையானது சுவாசப் பாதையையும், மூளையையும் தாக்கி ‘க்ரிப்டோகாக்கல் மெனிஞ் சைட்டி ஸ்’ எனும் ஆபத்தான நோயை உருவாக்க க் கூடியது.

போதுமான சூரிய ஒளி கிடைக்காது !!!

எந்நேரமும் ஏசியில் அமர்ந்திருப்பவர்களுக்கு சூரிய ஒளியானது போதுமான அளவு கிடைக்காது. இதனால் வைட்டமின் டி குறைபாடு உருவாகும். இந்த வைட்டமின், கருவுறுதலில் ஆரம்பித்து இதயம், நுரையீரல் சீராக இயங்குவது வரை தேவையான ஒன்றாகும். இது கிடைக்காமல் போனால் எலும்புகள் பலவீனமடையும். மூட்டுவலி, முதுகுவலி போன்றவை எளிதாக வரும். இதற்காகத்தான் நம் முன்னோர் அதிகாலையில் சூரிய வெளிசம் படுவது நல்லது என்று சொல்லி  வந்தனர். காலை 6 மணியில் இருந்து 7:30 மணி வரை உள்ள கதிரவனின் கதிர்களில், மனித உடலுக்கு அவசியமான வைட்டமின் டி கிடைக்கும். இந்த நேரத்தில் உடலில் சூரியனின் ஒளி படுமாறு நிற்பது அவசியம்.

ஏசிக்கு நேராக முகத்தை வைத்து உட்காரக் கூடாது. அப்படி உட் கார்ந்தால் சைனஸ் தூண்டப்படும். மூக்க டைப்பு, தலைவலி, காது அடைத்தாற்போல இருப்பது ஆகிய பிரச்சனைகளை ஏற்படுத்தும். சிலருக்கு ஏசியின் குளிர்ந்த காற்று சுவாசப் பாதையை ரணமாக்கி விடும். கூருணர்ச்சி(Sensitive) அதிகமுள்ளவர்கள் ஏசியை முடிந்த அளவு தவிர்த்து விட வேண்டும்.

சிலர் (விண்டோ) ஏசியின் அருகிலேயே தலை வைத்து படுப்பார்கள். குளிர்ந்த காற்றானது இரவு முழுவதும் காதுக்குள் சென்று முக நரம்பை பாதிப்படையச் செய்து ‘பெல்ஸ் பேல்சி’ (Bell’s palsy) என்னும் முகவாதத்தை உருவாக்கும். காலையில் எழுந்து கண்ணாடியில் முகம் பார்த்தால் வாய் ஒரு பக்கம் கோணிக் காணப்படும். ஏசியின் மிக அருகில் தூங்குவதைத் தவிர்த்து விட வேண்டும்.

வீட்டின் அருகே மரம், செடி, கொடிகளை வளர்த்து, காலையில் எழுந்து சுத்தமான காற்றை சுவாசிக்க வேண்டும். சூரிய ஒளி உடலில் படும்படி சில உடற்பயிற்சிகளை செய்ய வேண் டும். மூச்சுப் பயிற்சிகளை முறைப்படி தினமும் செய்வது வாழ்நாளைக் கூட்டும். அலர்ஜி பிரச்சனை உள்ளவர்கள் பழங்களை உண்ணலாம்.

தேவைக்கு மட்டும் ஏசியை பயன்படுத்தலாம் : 

இயற்கையோடு இயைந்த வாழ்க்கையை வாழ்வதன் மூலம் ஏசியால் ஏற்படும் பாதிப்புகளை கட்டுப்படுத்தலாம். ஏசியை தேவைக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஏசி பகுதியில் வேலை பார்க்கும் நிர்பந்தம் உள்ளவர்கள், காதுகளில் ஏர் பிளக் அல்லது பஞ்சை வைத்து சமாளிக்கலாம். முடிந்த வரை முகத்தை ஏசிக்கு அருகில் வைக்காமல் தள்ளி அமர்ந்துகொள்ள வேண்டும

‘‘ஏசியில் அதிக நேரம் அமர்ந்திருப்பதால் சருமமானது எண்ணெய் பசை சுரப்பதை நிறுத்திவிடுகிறது. எண்ணெய் பசை திரவங்களும் வியர்வையும் சரியான முறையில் சுரந்தால்தான் சருமம் வறண்டு போகாமல் ஈரப்பதத்துடன் இருக்கும். இல்லாவிட்டால் சருமம் உலர்ந்து, வறண்டு விடும். ‘ப்ரீமெச்சூர்டு ஏஜிங்’ எனப்படும் வயதுக்கு முந்தைய மூப்புத் தோற்றம் ஏற்படும்.

ஏசியில் அதிகநேரம் அமர்ந்திருப்பவர்களுக்கு தலைமுடியும் உடைய ஆரம்பிக்கும். கூந்தலின் வலுவும் குறையும். சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படும். ஏசியை முறையாக சுத்தம் செய்யாமல் பயன்படுத்து பவர்களுக்கு பாக்டீரியா தொற்று ஏற்பட்டு சருமம் பாதிக்கும். அலுவலகத்தில் ஒருவருக்கு காய்ச்சல், அம்மை அல்லது மெட்ராஸ் ஐ போன்ற நோய்கள் இருந்தால், அது மற்றவர்களுக்கும் எளிதில் பரவிவிடும்.

சிலருக்கு கண்களில் கண்ணீர் சுரக்காமல் உலர்ந்துவிடும். இவர்களுக்கு கண்களில் வலி, எரிச்சல் இருக்கும். ‘ஆர்ட்டிஃபிசியல் டியர்ஸ்’ (Artificial tears) எனப்படும் செயற்கை கண்ணீர் இப்போது கிடைக்கிறது. மருத்துவர் ஆலோசனையுடன் அதைப் பயன்படுத்தி, கண்கள் உலர் வதை சரிசெய்து கொள்ளலாம். சருமம் உலர்வதை தரமான மாய்ச்சுரைஸிங் க்ரீம் பயன்படுத்துவதன் மூலம் தடுக்கலாம். ஹைய லுரானிக் ஆசிட் (Hyaluronic acid) எனும் முகத்தில் சுரக்கும் திரவமே முகத்தைப் பொலிவாக வைத்துக்கொள்ள உதவுகிறது. இந்த ஆசிட் அடங்கிய மாய்ச்சுரைஸிங் க்ரீம் இப்போது கிடைக்கிறது. மருத்துவர் ஆலோசனையுடன் அதைப் பயன்படுத்தி முகச்சுருக்கங்களைத் தவிர்க்கலாம்.

சோரியாசிஸ்!!!

ஏற்கனவே சோரியாசிஸ், எக்சிமா போன்ற சரும நோய்கள் உள்ளவர்கள் ஏசியில் அதிக நேரம் அமர்ந் தால் நோய் இன்னும் தீவிர மாகும். இயற்கையான சூரிய ஒளியும், மாசு இல்லாத சுகாதாரமான காற்றும் நமது சருமத்துக்கு அவசியம் என்பதை மறந்துவிடக் கூடாது. அதனால், தேவைக்கு ஏற்பவே ஏசியை பயன் படுத்திக் கொள்ளவேண்டும். ஏசியை அதிக நேரம் பயன்படுத்துவதைத் தவிர்க்கவேண்டும்.
மேலே சொன்ன விளக்கம் போதும் என நினைக்கிறன் யோசிப்போம்!!! இயற்கையில் வாழ முயற்சிப்போம் நீண்ட காலம் வாழ பிராத்திப்போம்.

நன்றி : அலாவுதீன்