அக்குபங்சர் சிகிச்சை பெறுவோர் புரிந்து பின்பற்ற வேண்டியவை
Ø அக்குபங்சர்
ஓர் அறிவியல் பூர்வமான சிகிச்சை முறையாகும்.
Ø உடலின்
உள்ளுறுப்புக்களில் தேக்கமடையும் கழிவுகளும், சக்தி ஓட்டப்பாதையில் ஏற்படும் தடைகளுமே
நோய்களாகும். அவற்றைக் களைய தோலின் மேற்பகுதியில் அமைந்துள்ள அக்குபங்சர் புள்ளிகளைத்
தூண்டுவதே சிகிச்சையாகும்.
Ø சிகிச்சை
பெறுவோர் உடலோடு ஒத்துழைக்க வேண்டும். பசி, தாகம், ஓய்வு, தூக்கம் ஆகியவற்றை ஏற்று
பின்பற்ற வேண்டும்.
Ø பசி எடுத்தால்
மட்டுமே சாப்பிட வேண்டும். பசி இல்லாமல் சாப்பிடக் கூடாது. அதே சமயம் பசி எடுத்தால்
சாப்பிடுவதைத் தள்ளிப் போடக்கூடாது. பசி இல்லை என்றால் ஒரு வேளை பட்டினியாய் இருந்து
ஓய்வெடுத்துக் கொள்வது அடுத்த வேளை பசியை தூண்டி விட ஏதுவாய் இருக்கும்.
Ø சம்மணம்
போட்டு அமர்ந்து சாப்பிடவேண்டும்.
Ø உணவை நன்றாக மென்று, ரசித்து,
ருசித்து சாப்பிட வேண்டும். உணவானது வாயிலேயே சுவை முழுவதும்
நீக்கப்பட்ட நிலையில் வெறும் சக்கையாக விழுங்கப்பட வேண்டும்.
Ø சாப்பிடுவதற்கு அரை மணி நேரம்
முன்பும், பின்பும் சாப்பிடும் போது இடையிலும்
நீர் அருந்தக் கூடாது. விக்கல் ஏற்பட்டால் தொண்டை
நனையும் அளவுக்கு மட்டும் சிறிது தண்ணீர் குடித்துக் கொள்ளலாம்.
Ø இரவு உணவை ஏழு மணியிலிருந்து
எட்டு மணிக்குள் சாப்பிடுதல் நல்லது. மாலை வேளையில்
எந்தவித நொறுக்குத் தீனிகளும் சாப்பிடாமல் இருந்தால் இரவு எட்டு மணி வாக்கில் பசி தானாகவே
ஏற்படும். கல்லீரலைக் கொண்டு நச்சுக் கழிவுகளை முறிக்க முடிந்தவரை எளிதில் ஜீரணமாகும்
பழங்கள், கஞ்சி போன்றவற்றை இரவு உணவாகக் கொள்ளலாம்.
Ø அந்தந்த
பருவத்தில் கிடைக்கும் இனிப்பான பழங்களை உணவோடு சேர்த்துக் கொள்ள வேண்டும். பழங்கள்
எளிதில் ஜீரணமாகி கழிவுகள் வெளியேற்றும் பணியை துரிதப்படுத்தும்.
Ø தாகம் இருந்தால்தான் தண்ணீர்
குடிக்க வேண்டும்.தாகம் தணிகிறவரை மட்டும் குடித்தால் போதுமானது.
Ø அண்ணாந்து மடமடவென தண்ணீரை விழுங்காமல்,
கீழுதடு நனையும் வகையில், மெதுவாக சப்பி, ரசித்து,ருசித்து குடிக்க வேண்டும்.
Ø நல்ல
காற்றோட்டமுள்ள இடத்தில் தூங்க வேண்டும். இரவு
10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை தூக்கம் மிகவும் அவசியம்.
Ø அக்குபங்சர்
சிகிச்சை எடுத்துக் கொள்ளும்போது உடலில் ஏற்படும் மாற்றங்கள் அனைத்தும் நோயின் வெளியேற்றம் ஆகும். தொந்தரவுகள் குறைவது,
அதிகமாகிப் பிறகு குறைவது, இடம் மாறுவது போன்றவை நல்ல அறிகுறிகள் ஆகும்.
Ø இது
வரை தங்கியிருந்த கழிவுகள் காய்ச்சல்,வலி, வயிற்றுப் போக்கு, வாந்தி, சளி, தூக்கம்
போன்றவை மூலம் வெளியேற்றப்படும். இதற்காக பயப்பட
வேண்டியதில்லை. இவற்றை தொந்தரவுகளாக கருதாமல், கழிவு வெளியேற்றப்படுவதற்கு சிகிச்சை
நடைபெறுவதாக புரிந்து கொள்ள வேண்டும். இந்த
நேரத்தில் பிற மருந்துகள், இரசாயன பொருட்கள் போன்றவற்றை எடுத்துக் கொள்ளக் கூடாது.
அவசியமெனில் சிகிச்சை அளித்த அக்குஹீலரைத் தொடர்பு கொள்ளலாம்
Ø சிகிச்சை
பெறுவோர் கண்டிப்பாக டீ, காபி, பால், தயிர்,
சீனி எனப்படும் அஸ்கா சர்க்கரை மற்றும் அதிக
புளிப்பு தரும் உணவுகளை தவிர்க்க வேண்டும். இது செரிமானத்தை சீராக்கும். எளிதாக்கும்.
பால் கலக்காத டீ, காபி, கருப்பட்டி காபி, சுக்கு காபி, காய்கறி சூப், கீரை சூப், ஆட்டுக்கால்
சூப் போன்றவற்றை அருந்தலாம்
.
Ø மது,
புகை, ரசாயன மருந்துகள் போன்றவற்றை சிகிச்சை
தொடங்கிய உடனேயே நிறுத்தி விட வேண்டு்ம். பராமரிப்பு மையமான கல்லீரலை இவை பாதிக்கின்றன.
அதனால் நலமடைதல் தாமதமாகும்.
Ø ஒரு
நாளைக்கு இரு முறை மலம் கழித்தல் ஆரோக்கியம். அக்குஹீலரின் ஆலோசனையுடன் வாரம் இருமுறை நல்லெண்ணெய் குளியல், வருடம் இருமுறை
பேதிக்கு சாப்பிடுதல் நலம் தரும்.
Ø கவலையும்,
மன உளைச்சலும் ஜீரணத்தை பாதிக்கும். அதனால் உணவு மூலமாக கிடைக்கும் உயிரோட்டம் பாதிக்கப்படும்.
எனவே எந்த அளவுக்கு கவலை, மன உளைச்சல் இல்லாமல் இருக்கிறோமோ, எந்த அளவுக்கு உடல் சொல்வதை கேட்டு முழு நம்பிக்கையுடன் நடக்கிறோமோ
அவ்வளவு சீக்கிரம் இறைவன் நாடியபடி உடல் நோய்கள் விரைவில் குணமாகும்.
No comments:
Post a Comment