வாழ்க வளமுடன்
இராணிப்பேட்டை அக்குபங்சர் அகாடமி
இராணிப்பேட்டை அக்குபங்சர் அகாடமி, வேலூர் மாவட்டம் இராணிப்பேட்டை நகரில் செயல்பட்டு வருகிறது. இது ஹீலர் பாஸ்கர் அய்யா அவர்களின் குரு நாதர்களில் ஒருவரான ஹீலர் திரு. இயற்கை குமார் அவர்களுடைய கோவை அக்குபங்சர் அகாடமியுடன் இணைந்து அக்குபங்சர் மருத்துவ பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் நிறுவனராகவும், தலைமையாசிரியராகவும் அருள்நிதி.திரு .வேதாத்திரி விக்ரம் அவர்கள் இருக்கிறார்.
அருள்நிதி.திரு.வேதாத்திரி விக்ரம்
இன்றைக்கு காற்றும், நீரும், உணவும் நஞ்சாகிப் போனதால் புதுப்புது நோய்கள் வந்து கொண்டே இருக்கின்றன. ஒவ்வொருவரும் தங்களின் வருமானத்தில் பெரும்பகுதியை மருத்துவத்திற்கே செலவிட வேண்டியுள்ளது.
இந்நிலையை மாற்றி ‘உணவே மருந்து, உடலே மருத்துவர்’ என்கிற உண்மையை உலகுக்கு உணர்த்திட உருவாக்கப்பட்டதே இராணிப்பேட்டை அக்குபங்சர் அகாடமி. மருந்து, மாத்திரைகள் ஏதும் இல்லாமல் மக்களை நோய்களிடம் இருந்து விடுவிக்கும் “அக்குபங்சர் சிகிச்சை” என்னும் மேன்மையான கலையை அனைவருக்கும் கொண்டு சேர்ப்பதே இராணிப்பேட்டை அக்குபங்சர் அகாடமியின் நோக்கம்.
நோயாளிகள், நோயாளிகளாய் வாழ்க்கையைத் தொடராமல் அவர்களே நோய் நீங்கி மருத்துவர்களாய் மாறி வாழ செய்வதே அக்குபங்சர் மருத்துவம்.
அக்குபங்சர் மருத்துவத்தின் பாரம்பரியத் தன்மைகளை உள்ளடக்கிய முழுமையான பயிற்சியை அளிப்பது, மற்றும் மாற்று மருத்துவங்களான இயற்கை மருத்துவம், உணவு மருத்துவம், வர்மக்கலை, பிராணிக் ஹீலிங் போன்ற கலைகளை கற்க ஊக்கமும், வாய்ப்பும் தரப்பட்டு, பன்முகத் தன்மை வாய்ந்த அக்குபங்சர் மருத்துவர்களை உருவாக்க இராணிப்பேட்டை அக்குபங்சர் அகாடமி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
உடல் ஆரோக்கியம், சுற்றுச் சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு, இயற்கை வேளாண்மை, சமூகத்தில் உடலையும், உள்ளத்தையும் ஒரு சேர சீரழிக்கும் நவீன கலாச்சாரத்தின் தீங்குகள் (M0dern culture), அவற்றைக் களைவது போன்றவற்றை மக்கள் மத்தியில் கொண்டு சென்று மக்கள் மத, இன, மொழி, நிற வேறுபாடின்றி மனித நேயத்தோடு வாழ வழிகாட்டும் பணிகளில் இராணிப்பேட்டை அக்குபங்சர் அகாடமி ஈடுபடுகிறது.
பயிற்சியின் விபரம்:
1. ஐந்து நாள் பயிற்சி வகுப்பு: (5 ஞாயிறுகள் மட்டும்)
அகாடமி சான்றிதழ் உண்டு.
பயிற்சி நேரம்: காலை 9.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை
2. பத்து நாள் பயிற்சி வகுப்புகள்:
(வேலைக்கு செல்பவர்கள், வீட்டில் இருக்கும் பெண்கள் மற்றும் மாணவர்களுக்காக)
பயிற்சி நேரம்: காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை அல்லது மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை
பயிற்சி நடைபெறும் நாட்கள் : புதன் மற்றும் சனிக்கிழமைகள்
3. ஒரு வருட பயிற்சி வகுப்புகள்:
M.Acu சான்றிதழ் உண்டு.
ஏப்ரல் மாதம் இரண்டாம் வாரம் தொடங்குகிறது.
பயிற்சி நேரம்: காலை 9.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை
பயிற்சி நடைபெறும் நாட்கள் : ஒவ்வொரு மாதமும்
2 –வது சனி, ஞாயிற்றுக் கிழமைகள்
அனைத்துப் பயிற்சிகளுக்கும் சம்பந்தப்படும் பாடங்களுக்கேற்ப பயிற்சி புத்தகங்கள், மூலிகைப் பானம், மதிய உணவு வழங்கப்படுகிறது.
ஒரு வருட பயிற்சிக்கு செய்முறை பயிற்சியும்,எழுத்துத் தேர்வும் ஏப்ரல் மாதத்தில் நடைபெறுகிறது.
செய்முறை பயிற்சியிலும், எழுத்துத் தேர்விலும் தேர்ச்சி பெறும் பயிற்சியாளர்களுக்கு மத்திய அரசின் வழிகாட்டுதலில் இயங்கும் “Bharath Sewak Samaj” என்ற அமைப்பு வழங்கும் “Master Certification in Acupuncture” என்ற சான்றிதழ் வழங்கப்படுகிறது.
பயிற்சிகளுக்கான பாடத்திட்டங்கள் கோவை அக்குபங்சர் அகாடமியுடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது.
அக்குஹீலர். இயற்கை குமார், அக்குஹீலர். மகேஷ், அக்குஹீலர். கணேசன், அக்குஹீலர்.ராகவன், அக்குஹீலர். பழனிச்சாமி, அக்குஹீலர்.பிரவீணா மற்றும்
அக்குஹீலர் மதீனா பேகம் ஆகியோர் வருகைப் பேராசிரியர்களாக வந்து பயிற்சியளிக்கிறார்கள்.
*********************************************************************************************
அனைத்து வியாழக்கிழமைகளிலும்
அக்குபங்சர் மருத்துவம் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை வழங்கப்படும்
ஒவ்வொரு மாதமும் 1வது, 3வது,
வது புதன் கிழமைகளில் மதியம் 12.30 மணி முதல் 3.00 மணி வரை இலவசமாக மருத்துவ ஆலோசனை
வழங்கப்படுகிறது.
மன அமைதி பெற தியானம், உடற்பயிற்சி
கற்றுத் தரப்படுகிறது.
தொடர்புக்கு:
சந்திரா சரவணன் பூரண ஆரோக்கிய
மஹால்,
நெ. 44A/19, ஆற்றுக்கால்வாய்
தெரு,
காந்தி நகர்,
இராணிப்பேட்டை.
செல்: 97900 99358
Email : csvvikram5@gmail.com & ranipettaiacuacadamy@gmail.com
No comments:
Post a Comment